tag:blogger.com,1999:blog-2978525660451058794.post2670304175221343778..comments2024-03-02T10:41:05.753+05:30Comments on அறிவியல்புரம்: பணக்காரர்களின் மின்சாரம்என்.ராமதுரை / N.Ramaduraihttp://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-2978525660451058794.post-15631085304268078052013-03-25T05:17:01.195+05:302013-03-25T05:17:01.195+05:30 நாட்டில் இப்போதுள்ள நிலையில் அணுமின்சார நிலையங்கள... நாட்டில் இப்போதுள்ள நிலையில் அணுமின்சார நிலையங்கள் அவசியமே என்பது என் கருத்து.ஈரானில் ரஷியாவில், கஜகஸ்தானில் உள்ளது போன்று இந்தியாவில் ஏராளமான அளவுக்கு எரிவாயு கிடைக்குமானால் அந்த எரிவாயுவைக் கொண்டு பலப் பல மின்சார நிலையங்களை அமைத்து விட முடியும்.<br /> தென் மானிலங்களில் குறிப்பாகத் தமிழகத்தில் எரிவாயு அற்ப அளவுக்கே கிடைக்கிறது( நரிமணம்) நிலக்கரியும் கிடையாது. ஆனால் மின்சாரத் தேவையோ பயங்கரமான அளவுக்கு அதிகரித்துக் கொண்டு போகிறது.<br /> ஆகவே மின்சார உற்பத்தியைப் பெருக்க அணுசக்தி ஒன்று தான் கதி என்ற நிலை உள்ளது.<br /> உலகெங்கிலும் பல நூறு அணுமின்சார நிலையங்கள் பாதுகாப்பான அளவில் செயல்பட்டு வருகின்றன.<br /> ஜப்பானில் புகுஷிமா அணுமின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டதற்கு முட்டாள்தனமே காரணம்.ஜப்பான் முன்னேறிய நாடு தான். ஆனால் ஜப்பானில் எல்லாமே மிகச் சிறப்பாக உள்ளது என்று நினைப்பது தவறு.ஜபபானில் அணுமின் நிலையங்கள் அனைத்தும் தனியார் துறையில் உள்ளன. ஆனால் அமெரிக்காவில் உள்ளது போல அவற்றைக் கண்காணிக்கின்ற ஏற்பாடு கிடையாது.<br /> தனியார் துறையில் பல சமயங்களிலும் அசட்டு சிக்கனம் பிடிப்பார்கள்.அப்படியான விஷயமும் அங்கு விபத்து ஏற்பட்டதற்கு ஒரு காரணம்.<br /> சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்துக்கு ஆதரவாக மேடைகளில் பேசியிருக்கிறேன். அணுமின்சாரத்தை தீவிரமாகவே ஆதரித்திருக்கிறேன்.<br /> அணுமின்சாரம் போன்ற விஷயங்களில் அரசியலைக் கலப்பதோ, உணர்ச்சிகளைத் தட்டி விடுவதோ தவறானது.<br /> அதே நேரத்தில் அணுசக்தி பற்றி மக்களுக்குப் புரியும் வகையில் எடுத்துக்கூற மத்திய அரசு தவறி விட்டது.என்று நான் கருதுகிறேன்.<br /> அணுமின்சார நிலையங்கள் விஷய்த்தில் மத்திய அரசு முக்கியமாக எடுக்க வேண்டிய முடிவு ஒன்று இருக்கிறது. அதாவது அணுமின் நிலையங்களைக் க்ண்காணிக்க அமெரிக்காவில் இருப்பது போன்று சுய அதிகாரம் கொண்ட தனி அமைப்பு தேவை.அப்படியான அமைப்பு விரைவில் நிறுவப்பட்டாக வேண்டும். <br /> <br />என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-86829949668159537082013-03-25T03:05:24.713+05:302013-03-25T03:05:24.713+05:30திரு ராமதுரை அய்யா அவர்களுக்கு
“அணு உலை வேண்டுமா ...திரு ராமதுரை அய்யா அவர்களுக்கு<br /><br />“அணு உலை வேண்டுமா வேண்டாமா என்ற விவாதம் முடிவற்றது. அதில் ஈடுபட நான் விரும்பவில்லை”.<br />என்ற தங்களின் முடிவு என்னை போன்ற சாதாரண பொதுமக்களுக்கு அதிர்ச்சியையும் ஏமாற்றதையும் ஏற்படுத்துகிறது. பொதுமக்களின் பயத்தையும் அறியாமையும் போக்குவது தங்களை போன்ற விஞ்ஞானிகளின் பொறுப்பும் கடமையும் கூட.<br />மைக்கேல் பாரடே போன்ற பல விஞ்ஞானிகள் மின்சாரத்தை கண்டுபிடித்தபொழுது அதை தொட்டால் மரணம் ஏற்படும் என்ற பீதி மக்களிடம் ஏற்பட்டபொழுது அதை எப்படி பாதுகாப்பாக பயன்படுத்துவது என்று விஞ்ஞானிகள் மக்களிடம் விளக்கி அவர்களின் பயத்தை போக்கியதல்தான் இன்று மின்சாரம் மக்களின் அத்தியாவசிய ஒன்றாகியுள்ளது.<br />எந்த ஒரு விவாதத்துக்கும் முடிவு உள்ளது. அணு உலை பற்றி பயம் கொண்டுள்ள சில நூறு மக்களை தற்போது இயங்கிக்கொண்டிருக்கும் அணு மின் நிலையங்களுக்கு அழைத்துச்சென்று அங்கு எப்படி பாதுகாப்பாக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது, அணுக்கழிவுகள் எப்படி பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்படுகிறது என்பதை விஞ்ஞானிகள், அரசாங்கம் விளக்கி அவர்கள் பயத்தை போக்க வேண்டும்.<br />இப்படிக்கு <br />முருகன். toolmurugan@gmail.com<br />Anonymoushttps://www.blogger.com/profile/17025864402142522370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-17667492579584670712012-08-27T18:47:57.894+05:302012-08-27T18:47:57.894+05:30Arul
தாங்கள் கேட்கின்ற கேள்விகளுக்குப் பதில் சொல்வ...Arul<br />தாங்கள் கேட்கின்ற கேள்விகளுக்குப் பதில் சொல்வதென்றால் ஒன்றுக்கும் மேற்பட்ட நீள்மான கட்டுரைகளை எழுத வேண்டியிருக்கும்.<br /> அணுக்கழிவைப் பாதுகாக்க செலவு ஆகும் என்பது உண்மையே. ஆனால் அணு உலையில் எரிந்து தீர்ந்த எரிபொருள் தண்டுகளிலிருந்து விலை மதிப்பு மிக்க பொருட்களைப் பிரித்தெடுக்க முடியும் என்பதை யாரும் கணக்கில் கொள்வதில்லை.<br /> அணு உலை வேண்டுமா வேண்டாமா என்ற விவாதம் முடிவற்றது. அதில் ஈடுபட நான் விரும்பவில்லை.என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-33386384783756970192012-08-27T18:01:46.014+05:302012-08-27T18:01:46.014+05:30"ரொம்ப நன்றி சார் .....பதில் சொல்லாம இருந்தது..."ரொம்ப நன்றி சார் .....பதில் சொல்லாம இருந்ததுக்கு...."<br /><br />அணுக் கழிவைப் பாதுகாக்க எவ்வளவு செலவாகும்?<br /><br />அணு உலைக்கு ஆகும் செலவு எவ்வளவு?<br /><br />இழப்பீட்டுச் சட்டத்தில் விபத்து ஏற்பட்டால் அணு உலை விற்ற கம்பேனி எவ்வளவு நஸ்ட ஈடு தரும்?<br /><br />(தயவு செய்து பதில் சொல்லுங்கள்...அணு உலையை ஆதரித்தவன் நான்..என் நண்பர்களுக்கு நான் மேற்கண்ட பதிலை அளிக்காவிடில் கேலி செய்கின்றனர்.போராட்டக்காரர்கள் போராடியது சரி என்ற முடிவுக்கே நான் வர இயலும்.)<br /><br />RANGAhttp://www.ariviyal.in/2012/01/blog-post_21.htmlnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-77390896163388601612012-03-01T11:01:55.338+05:302012-03-01T11:01:55.338+05:30ரங்கன்
பல ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா ரகசியமாக அண...ரங்கன்<br />பல ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா ரகசியமாக அணுகுண்டு தயாரித்துக் கொண்டிருந்த போது அணுசக்தி பற்றிய பல விஷயங்கள் மூடுமந்திரமாக இருந்தது உண்மையே. இப்போது அப்படி இல்லை.கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கும் அணுகுண்டு தயாரிப்புக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.கூடங்குளம் போன்ற அணுமின் நிலையங்களிலிருந்து அணுசக்திப் பொருள் எதுவும் அணுகுண்டு தயாரிப்புக்குச் செல்லாதபடி கண்காணிக்க சர்வதேச அணுசக்தி ஏஜன்சி என்ற அமைப்பு உள்ளது. அந்த அமைப்பின் நிபுணர்கள் வழக்கமாக அணுமின் நிலையங்களுக்குச் சென்று கண்காணிப்பது போல சில நாட்களுக்கு முன்னர் கூடங்குளத்துக்கும் வந்து சென்றார்கள். எல்லாவற்றிலும் ஏதோ மூடுமந்திரம் இருப்பதாக நினைப்பது வெறும் கற்பனை. பொய்யான பிரசாரங்களே இப்படி நினைக்க வைக்கிறதுஎன்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-12794959649303141582012-03-01T10:56:19.865+05:302012-03-01T10:56:19.865+05:30பிரபு கிருஷ்ணா
அண்மையில் மத்திய அரசின் NTPC நிறுவன...பிரபு கிருஷ்ணா<br />அண்மையில் மத்திய அரசின் NTPC நிறுவனம் யூனிட் ரூ 12 என்ற விலையில் தான் சூரிய மின்சாரத்தை வாங்க ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. நீங்கள் கூறுவது போல சூரிய மின்சாரத்தின் விலை ரூ 5 அல்ல.என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-33902726940688640922012-03-01T10:28:29.764+05:302012-03-01T10:28:29.764+05:30மேலே முகம் தெரியாத நண்பர் கூறி உள்ளது போல அணு மின்...மேலே முகம் தெரியாத நண்பர் கூறி உள்ளது போல அணு மின்சாரம் செலவு அதிகம் தான். யோசித்து பாருங்கள் நான் மின்சாரம் ஒரு யூனிட் என்ன விலை என்று தான் பார்க்கிறோம். ஆனால் அதற்கு ஆகும் முதலீடு, பராமரிப்பு, அணு மின் கழிவுகளை பாதுக்கப்பாய் அப்புறப்படுத்த ஆகும் செலவுகளை கணக்கிட்டால் சூரிய மின்சாரத்தை விட அதிக செலவே ஆகும். <br /><br />அத்தோடு சூரிய மின்சாரத்தின் இந்த பதினைந்து ரூபாய் என்பது 2001 இல் மூலப் பொருட்களின் விலையை கொண்டு கணக்கிடப்பட்டது. இன்றைய சூழ்நிலையில் மூலப் பொருட்கள விலை மிகவும் குறைந்துள்ள நிலையில் ஒரு யூனிட் ஐந்து ரூபாய்க்கும் குறைவானதே.Prabu Krishnahttps://www.blogger.com/profile/09807298680261445497noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-9862505505585381032012-03-01T07:58:34.119+05:302012-03-01T07:58:34.119+05:30அணு உற்பத்தி மீதான மக்களின் நம்பிக்கையின்மை ஒருபக்...அணு உற்பத்தி மீதான மக்களின் நம்பிக்கையின்மை ஒருபக்கம் இருந்தாலும், அதை பற்றிய தெளிவான விளக்கங்களை அறிவியல் ஆய்வாளர்கள் பொதுமக்களுக்கு தெரிவிக்காமல் இருப்பது நிச்சயம் சந்தேகத்திற்கு அடிகோல்கிறது.Ungalrangahttps://www.blogger.com/profile/09956737828551627007noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-87658419300578491912012-02-29T22:08:52.618+05:302012-02-29T22:08:52.618+05:30தங்களது பதிவை இப்போது தான் படிக்கிறேன்.
அருமையான ப...தங்களது பதிவை இப்போது தான் படிக்கிறேன்.<br />அருமையான பதிவு. அருமையான விளக்கங்கள்.<br />எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.<br />நன்றி ஐயா.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-27863379967220365732012-02-15T14:47:32.787+05:302012-02-15T14:47:32.787+05:30அணுமின்சக்தி தொழில் நுட்பத்துக்கும் செலவிடப்படும் ...அணுமின்சக்தி தொழில் நுட்பத்துக்கும் செலவிடப்படும் தொகைக்கும் கிடைக்குக் பலனுக்கும், சூரிய சக்திக்கும் செலவிடப்படும் தொகைக்கும் கிடைக்கும் பலனுக்கும் உள்ள விகிதத்தைக் கணக்கிட்டால் எது பணக்காரர்களின் மின்சக்தி என்பதும் தெரியவரும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-47628615566347798792012-02-15T14:44:55.804+05:302012-02-15T14:44:55.804+05:30//அணுமின்சாரம் குறைந்த விலையிலான மின்சாரம் அல்ல என...//அணுமின்சாரம் குறைந்த விலையிலான மின்சாரம் அல்ல என்று கூறி புள்ளி விவரம் அளிப்பவர்களும் உள்ளனர்.//<br /><br />உங்கள் வலைப்பதிவை தொடர்ந்து வாசிப்பவர்களில் ஒருவன் நான். உங்களது மேற்கண்ட வரிகள் மிகவும் மேலோட்டமாக உண்மையை தாண்டிச்செல்வது போல எழுதப்பட்டதாக நினைக்கிறேன். அணுமின்சக்தியின் மொத்த விலையானது மற்ற எந்த மின்சக்தியையும் விட மிக அதிகமானதே ஆகும். அதன் கழிவுகளை நீண்ட நெடுங்காலத்துக்கு பாதுகாக்கவும், அணு சக்தி மூலப்பொருட்களையும் கழிவுகளையும் கையாளும் போது ஏற்படும் மனித பாதிப்புகள்/ இழப்பீடு மற்றும் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் இவற்றை கணக்கில் கொண்டு பார்க்கும் போது ஏற்படும் செலவுகளையும் கணக்கில் கொள்ள வேண்டும். பிளாஸ்ட்டிக் ஒரு மலிவான, வசதியான மாற்றுப்பொருளாக உபயோகிக்கப்பட்ட சில பத்துஆண்டுகளிலேயே அதனால் அசுத்தமாக்கப்பட்ட சூழலையும், அதை சுத்தப்படுத்த ஆகும் செலவுகளையும், மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் புற்றுநோய் போன்ற நோய்களையும் நாம் கணக்கில் எடுத்தால் அது மலிவான, பாதுகாப்பான மாற்றுப்பொருளா என்று தெரியவரும். இப்படி யோசித்திருந்தால் பிளாஸ்டிக்கின் உபயோகம் தற்போதுள்ளது போல இல்லாமல் மேலும் கவனமாகவும், பொறுப்பாகவும் செய்யப்பட்டிருக்கும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-50511449047020268772012-01-21T15:28:35.127+05:302012-01-21T15:28:35.127+05:30கருத்தும் பதிவும் மிக நன்று! தலைப்பை அவ்வாறு சொல்ல...கருத்தும் பதிவும் மிக நன்று! தலைப்பை அவ்வாறு சொல்ல முடியாது!Anonymoushttps://www.blogger.com/profile/05488907771431605506noreply@blogger.com