Oct 5, 2011

யாருக்கு நோபல் பரிசு?

Share Subscribe
     ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் பிறந்தால் போதும். அடுத்தடுத்த தேதிகளில் நோபல் பரிசுகள் அறிவிக்கப்படுவது வழக்கம். யாருக்குக் கிடைக்க்ப் போகிறது என்பது குறித்த ஹேஷ்யங்களும் கிளம்பும். இன்னாருக்குத் தான் கிடைக்கும் என்று பந்தயம் கட்டுவதும் உண்டு.

     அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் இப்படியாகப் பந்தயம் கட்டுகிற வழக்கம் உள்ளது. பொருளாதாரத்துக்கான இந்த ஆண்டு நோபல் பரிசு யாருக்கு என்பதில் தான் பந்தயம். இன்னாருக்குக் கிடைக்கும் என்று சொலபவர் ஒரு டாலர் கட்டணம் செலுத்த வேண்டும். ஒரே நபர் பலருடைய பெயரைக் கூறலாம். ஆனால் . ஒரு பெயருக்கு ஒரு டாலர் வீதம் செலுத்தியாக வேண்டும். இப்போதெல்லாம் இண்டர்னெட் வசதி வந்து விட்டதால் வெளியாரும் பந்தயத்தில் பங்கு பெற அனுமதிக்கப்படுகிறார்கள்.

      சரியாகக் கூறுபவருக்கு மொத்த வசூலில் ஒரு பகுதி பரிசாக வழங்கப்படுகிறது. பொருளாதாரத் துறைக்கான நோபல் பரிசு யாருக்கு என்பது வருகிற 10 ஆம் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது.

Alfred Nobel (1833 - 1896)
     வேதியியல், இயற்பியல்,இலக்கியம் முதலான இதர துறைகளிலும் இது போன்று பணம் கட்டுகிற பந்தயங்கள் உண்டு (ஹார்வர்டில் அல்ல) .

     ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஆல்ஃப்ரெட் நோபல் (Alfred Nobel) குறிப்பாக டைனமைட்(Dynamite) எனப்படும் வெடிமருந்தைக் கண்டுபிடித்ததன் மூலம் பெரும் செல்வந்தரானார். அவரது உயிலின்படி ஏற்படுத்தப்பட்ட நிதியிலிருந்து நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு மட்டும் வேறு நிதியிலிருந்து வழங்கப்படுகிறது.

     உயிருடன் இருக்கின்ற சாதனையாளர்களுக்கு மட்டுமே நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன். காலமாகிவிட்டவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. ஆனால் பரிசு அறிவிக்கப்பட்ட பின்னர் ஒருவர் காலமானால் பரிசு ரத்து செய்யப்படுவது கிடையாது. நோபல் பரிசு குறித்து பல சர்ச்சைகள் உண்டு.

No comments:

Post a Comment